மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகர பாராளுமன்ற சபை நடவடிக்கையில் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ப்ரேமலால் ஜயசேகர தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை ஆராய்ந்தன் பின்னரே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த நகரில் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் ப்ரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். எனினும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க சிறைச்சாலையில் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு எதிராக ரிட் மனுவொன்றை தாக்கல் செய்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிகோரியிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.