அம்பியுலன்ஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதோடு பொலிஸ் அதிகாரியொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் திருகோணமலை பிரதான வீதியின் ரன்பத்வில கெட்டக்கலாவ பிரதேசத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது. சிவில் பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸ் அதிகாரியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையிலேயே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கெப் ரக வாகனமொன்றுடன் மோதுண்டு பிரதான வீதியில் சாய்ந்துள்ள நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர், கஹட்டகஸ்திஹிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.