வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்றைய தினம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணி முதல் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளம், ஆண்டியப்புளியங்குளம் ஆகிய பகுதிகளிலும், மன்னார் பிரதேசத்தில் கற்கிடந்தகுளம் பிரதேசத்திலும் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.