பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான சகல வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமைப்போல் ஆரம்பமாகவுள்ளன. கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 6ம் தரத்திலிருந்து, 13ம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை முதல் வழமைப்போல் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் முதலாம் தரம் முதல் 13ம் தரம் வரையான சகல வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமைப்போன்று இடம்பெறுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.