அநுராதபுரம் புனித பூமியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வயது காதல் ஜோடிகள் கைதுசெய்யப்பட்டனர். அநுராதபுரம் பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர். கைதான அனைவரும் 14 மற்றும் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக தெரிவித்து இவ்வாறு முறையற்ற வகையில் நடந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த அனைவரும் எச்சரிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.