பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கதிர்காமம் கிரி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கதிர்காமம் கிரி விகாரைக்கு சென்ற பிரதமர் சைத்தியவுக்கு அருகாமையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த தேரரை சந்தித்த பிரதமர் அவரது சுகநலன்களை விசாரித்தார். மகா சங்கத்தினர். இதன்போது பிரதமரை ஆசிர்வதித்தனர். பின்னர் கதிர்காமம் விகாரை பூமிக்கு வருகை தந்த பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டார். ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்திருந்தனர்.
பிரதமருக்கும் நாட்டுக்கும் ஆசிவேண்டி தர்ம சொற்பொழிவொன்று கதிர்காமம் புனித பூமியில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரித் பாராயணத்தை செவிமடுத்தார். ருஹுணு மகா தேவாலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் அங்கு வருகை தந்த பக்தர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.