இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்து 20 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் 87 ஆயிரத்து 115 பேர் நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 69 ஆயிரத்து 635 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் குறித்த நோக்கத்தினால் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினறும் குற்றம் சுமத்தியுள்ளனர்.