நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 26 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் தமது சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருக்கும் கட்டாயம் காணப்படுகிறது. டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் காணப்படும் இடங்கள் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுருத்தியுள்ளார். சுற்றுச்சூழலை நாளாந்தம் சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதில் பொது மக்களுக்கு அதிக பொறுப்பு காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருன ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.