தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவுசெய்த 485 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். கல்பிட்டி, பூவரசன்குளம், முல்லைத்தீவு, அநுராதபுரம், நுரைச்சோலை மற்றும் பணிச்சங்கேணி; மத்திய நிலையங்கள்தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவுசெய்தவர்களே இன்று வீடு திரும்புகின்றனர்.
இதேவேளை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 497ஆக அதிகரித்துள்ளது. முப்படையினரால் முன்னெடுத்துச்செல்லப்படும் 74 மத்திய நிலையங்களில் தொடர்ந்தும் 8 ஆயிரத்து 330 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வரை புதிதான 4 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டனர். இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.