குருநாகல் புவனேக்க கட்டட தொகுதி தகர்க்கப்பட்டமை தொடர்பான வழக்கு குருநாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குருநாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவிசாரணை விசேட பிரிவிற்கு சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் 23 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.