விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கும். ஏனையோருக்கென விமான நிலையங்களை திறக்க அனுமதிப்பதன் ஊடாக நாட்டில் உள்ள மக்களை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து சுமார் 26ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 58 ஆயிரம் பேர் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.