ஜேர்மனியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ஐந்து குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மனியின் சொலிங் கிங் நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளின் தாய் அவர்களை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு குழந்தை மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஜேர்மன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.