பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்ரகாந்தன் எனும் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வருகை தந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்று கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வருகை தருமாறு சிவனேசதுரை சந்ரகாந்தனுக்கு அறிவித்திருந்தது. இதற்கு அமையவே இன்று காலை 8.30 மணியளவில் அவர் அவ்விடத்துக்கு வருகை தந்தார்.
முன்னாள் பா.உ ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை சம்பவம் தொடர்பாக தற்போது சந்தரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இவர் சாட்சி வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார்.