இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மகரகம இளைஞர் மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயம் செய்தார்.
தேசிய இளைஞர் மத்திய நிலையத்தின் பாடநெறிகள் மற்றும் அம்மத்திய நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளையும் அமைச்சர் கண்காணித்தார். அமைச்சின் செயலாளர் அநுராத விஜயகோன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான தெஷார ஜயசிங்க ஆகியோரும் இவ்விஜயத்தின் போது இணைந்திருந்தனர். விஜயத்தை தொடர்ந்து அமைச்சர் தேசிய இளைஞர் மத்திய நிலையத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
“பாரம்பரிய முறையில் குறுகிய மனோநிலையுடன் இளைஞர்கள் நோக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இளைஞர்களின் இதயமாக இளைஞர் சேவைகள் மன்றம் விளங்குகின்றது. இளைஞர்களை நோக்கும் விதத்தை மாற்றியமைக்க வேண்டும். எதிர்காலத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும். இளைஞர் சேவைகள் மன்றம் உள்ளிட்ட நிறுவனங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களும் தயாரிக்கப்படும். வெளிநாடுகள் செய்வதை நாங்கள் செய்ய் வேண்டியது இல்லை. ஆனால் நாங்கள் நவீன உலகத்திற்கு பிரவேசிக்க வேண்டும். ஆகவே இளைஞர் சேவைகள் மன்றத்தின் அடிப்படை பிரிவுகளை பாதுகாப்பதுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. “