சிறைச்சாலைகளிலுள்ள 444 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 29 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகிள் விடுதலைசெய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளிலுள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறு தவறுகள் தொடர்பில் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்கென தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களில் 18 பெண்கள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென சிறைச்சாலைகள் ஆணையாளகம் நாகயம் திசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.