மொரீசியஸ் தீவுகளின் தலைநகர் போர்ட் லூயிஸில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் மொரீசியஸ் தீவுகளை அண்மித்த கடற்பகுதியில் எண்ணெய் கப்பலொன்று விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் ஆயிரம் தொண் எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. இதன் காரணமாக குறித்த பகுதி சுற்றுச்சூழல் அவதானம் மிக்க வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எண்ணெய் கசிவினால் தமது நாடு பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கப்பல் விபத்துக்குள்ளான கடற்பகுதியில் இதுவரை 40 டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.