அமெரிக்காவின் லூசியானா நகரில் வீசிய லோரா புயல் தாக்கத்தினால் அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் மின் தடை மற்றும் நீர்விநியோக தடைக்கு முகங்கொடுத்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல்தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீர்செய்யும் பணிகள் லூசியானா நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 10 பேர் லூசியானா நகரை சேர்ந்தவர்களெனவும், நான்கு பேர் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர்களெனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் லூசியானா மற்றும் டெக்சாஸ் பகுதிகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டதாக லொஷிங்டன் தகவல் வெளியிட்டுள்ளது. அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் பணிப்புரை விடுத்துள்ளார்.