இலங்கை தனக்கே உரிய அபிவிருத்தி மாதிரியொன்றை உருவாக்கும் வழியில் செல்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு. டி லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி குறித்த செயற்பாடுகளில் அபிவிருத்தி பங்காளராக மாறி அதனை நிறைவேற்றும் எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை மாபெரும் மாற்றத்துக்கான மத்திய நிலையமாக தற்போது மாறியுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/FBxCjMSyI-A”]