புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விவாதம் ஆரம்பமானது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து அதன் மீதான விவாதம் நேற்று ஆரம்பமானது. குறித்த இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நான்கு மாதங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டு அல்லது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட உள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.