திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த கும்பலின் தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா ஒருவர் 3 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருகொடவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஒருகொடவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது 3 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேன் ஒன்றில் போதைப் பொருள் எடுத்துச்செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் இருந்து ஆறு இலட்சத்து 11 ஆயிரத்து 550 ரூபா பணமும் இரண்டு காசோலைகளும் பல ஏரிஎம் அட்;டைகளும் மீட்கப்பட்டுள்ளன. 40 வயதுடைய இந்நபர் வத்தளை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாவான இவர் தொடர்பு வைத்திருந்த ஏனைய நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.