சுகாதார வழிமுறைகள் மற்றும் கண்காணிப்புக்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சுக்களுக்கிடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்ட பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீள ஆரம்பிப்பத்தற்கு காணப்படும் சாத்தியகூறுகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சுகாதார அதிகாரிகள் பலரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை வெளியிட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளார்.