100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கொம்பனிதெரு பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர். இச்சந்தேகநபர்கள் நீண்டகாலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ஈட்;டிய ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணமும் வங்கி காட் அட்டைகளும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் இவர்களிடம் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
000
ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 30 ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் தங்காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து ஒரு கிராமும் 610 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீதிமன்றங்களில் 25 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவருக்கு எதிராக 11 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
000
களுத்துறை பயாகல அரச மரச்சந்தி பகுதியில் 20 கிராமும் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். களுத்துறை பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.