சூறாவளி காரணமாக அமெரிக்காவின் சில பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 185 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி காரணமாக டெக்சாஸ் மற்றும் லூசியானா ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.