உலகின் நீண்ட தூர பஸ் பயண சேவை அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் டெல்லியில் இருந்து லண்டன் வரை பஸ் பயணம் இடம்பெறவுள்ளது. மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், சீனா, ரஷ்யா, பெல்ஜீயம் மற்றும் பிரேன்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை ஊடறுத்து 20 ஆயிரம் கிலோமீற்றர் பஸ் பயணம் இடம்பெறவுள்ளது. பயணம் ஆரம்பித்து 70 தினங்களில் பஸ் குறிப்பிட்ட இடத்தை சென்றடையும். இதில் பயணிக்க 20 பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும். பஸ் கட்டணமாக நபரொருவருக்கு இந்திய பெறுமதியில் 15 இலட்சம் ரூபா அறவிடப்படும். முழு பயணத்திற்கும் கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுமென இந்திய சுற்றுலா நிறுவனமொன்று அறிவித்துள்ளது. பஸ் வழ லண்டன் என பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பயணிக்க 10 விசாக்கள் தேவைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.