குருநாகல் – கண்டி வீதியின் மடவல வளைவுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. குருநாகல் நோக்கிச் சென்ற கென்டைனர் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளது. இதன்போது குறித்த மோட்டார் வாகனம் அதற்கு எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கென்டைனர் மோதிய, மோட்டார் வாகனத்தை செலுத்திய 36 வயது சாரதி மற்றும் அவரது இரண்டு வயது மகள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கலகெதர பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.