இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை கடந்துள்ளது. 30 இலட்சத்து 43 ஆயிரத்து 436 பேர் அங்கு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 918 மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 56 ஆயிரத்து 846 பேர் தொற்றினால் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில், அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் கட்டத்தில் காணப்படுகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்கவில்லையென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.