பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை அழைப்புக்கள் கிடைக்காத விண்ணப்பதாரிகளுக்கு மேற்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலங்களுக்கு மேன்முறையீடுகளை முன்வைக்குமாறு அரச சேவைகள் , உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்காக அழைப்புக்கள் கிடைக்காத எனினும் தகைமைகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டமைக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உரித்துடையவர் அல்லது தொழில் புரிபவர் போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேற்முறையீடு செய்ய முடியும். இதற்கு அமைய தகைமை பெற்றிருந்தால் பயிற்சிக்கு அழைக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்னசிறி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விண்ணப்பதாரிகள் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான றறற.pரடியன.பழஎ.டம யில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணிப்பிக்குமாறு அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாதிரிக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட மேன்முறையீட்டையும் விண்ணிப்பித்த பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளருக்கு சமர்ப்பிக்க முடியும். தற்போது தொழில் ஒன்றில் ஈடுபடவில்லையென்பதை உறுதி செய்யும் சத்தியக்கடதாசி , தொழலிருந்து நீங்கியுள்ளதாக குறித்த நிறுவனத்திலிரந்து பெற்றுக்கொண்ட கடிதம், குறித்த நிறுவனத்தில் தொழிலொன்றை புரிவதாயின் பதவி, சம்பளம் போன்றன குறிப்பிட்ட நியமனக் கடிதத்தை மேன்முறையீட்டுடன் முன்வைப்பது கட்டயமாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் சௌபாக்கிய எண்ணக்கரு கொள்கை பிரகடனத்திற்கு அமைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதத் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவிற்கமைய குறித்த வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேரை சேவையில் ஈடுபடுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி படையணியொன்று ஸ்த்தாபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.