புதையல் தோன்றிய நால்வர் திஸ்ஸபுர பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வருகைதந்த வேன் மற்றும் அகழ்விற்கு என பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் தெவிநுவர, குடாவெல மற்றும் மித்தேனிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.