பட்டதாரிகள் பட்டம் பெறும் காலத்திலும் அதற்கு பின்னரும் தொழிலொன்றை பெற்றுக்கொள்வதற்கு வீதி வழியே பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருந்த கலாசாரத்திற்கு தற்போதய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது.
அதற்கு பதிலாக பட்டதாரிகளிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக்கொள்ளும் முறையையொன்றை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். தற்போது தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளோருக்கு மேலாக மேலும் 10 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்க புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தி கல்வித் தகுதிக்கு ஏற்ற தொழிலொன்றை கோரி பட்டம் பெற்றதன் பின்னர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் கலாசாரமே எமது நாட்டில் காணப்பட்டது. தொழில் பெற்றுத்தருமாறு கோரி நாட்டின் முதல் பிரஜையை சந்திக்க பேரணியில் வரும் பட்டதாரிகளை துரத்தி அடித்ததும் வழக்கமாக இருந்ததது. சில அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையை தமது அரசியலுக்காவும் இதனை பயன்படுத்தி வந்தனர். இது ஒரு நாட்டுக்கு பொருத்தமான செயற்பாடல்லவென்பதை புரிந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுபீட்சத்தின் நோக்கு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி ஒரு இலட்சம் வறியமக்களுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
பொதுத் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப கடந்த காலங்களில் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும் மீண்டும் அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த வேலையில்லாதோரை இணைத்துக்கொள்ள பல்லூடக அபிவிருத்தி செயலணியொன்றும் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இதில் பிரச்சினையிருந்தவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. அவ்வாறு பிரச்சினைகள் உள்ளவர்கள் அடங்கிய வேலையில்லா பட்டதாரிகள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர். அவர்களுக்கும் குறித்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுக்கொள்ள முடிந்தது. இன்றைய தினமும் மேலும் பலர் பட்டதாரிகளின் பட்டியலில் தமது பெயர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்தனர். அவர்களின் பிரச்சினைகளும் முன்வைக்கப்படும் போது தற்போhதய அரசாங்கம் அதற்கு தீர்வு வழங்கியுள்ளது.
பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தைவிட்டு வெளியேறிய ஜனாதிபதி இவர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். முன்னர் ரப்பர் குண்டுகள் , குண்டாந்தரி தாக்குதல் , நீர்ப்பீச்சு தாக்குதல்களினால் கவனிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முதல் தடவையாக நாட்டின் முதலாவது பிரஜையை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியமை புதியதொரு கலாசாரத்தின் ஆரம்ப படியாகும்.