வரலாற்று சிறப்புமிக்க நல்லையம்பதியானின் நல்லூர் அலங்கார கந்தனின் மகோற்சவத்தின் பஞ்சமூர்த்தி தெய்வங்களுடனான தீர்தோற்சவம் இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலுக்கும் வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், அலங்கார வேல்பெருமான் , வள்ளி தெய்வானை சண்டேஸ்வர் ஆகிய தெய்வங்கள் விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று அமைக்கப்பட்ட தீர்த்த கேணியில் நவக்கிரகங்களுக்கான அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்ற சண்டடேஸ்வரருக்கு தீர்த்த கிரியைகள் இடம்பெற்றன. பஞ்சமூர்த்தி பரிவாரங்களும் வெளி வீதி ஊடாக அருள்பாலித்தார். ஆலய பிரதம குரு சிவ சிறி வைக்குந்தன் தலைமையில் சிவாச்சாரியார்கள் தீர்தோற்சவத்தினை நடாத்தி வைத்தனர். நாளை மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.