போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 31 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம மஜிஸ்ரேட் லங்கா ஜயரட்ன இன்று உத்தரவிட்டார்.
முறைப்பாட்டை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. கொவிட் தொற்று காரணமாக இவர்கள் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.
குற்றபுலனாய்வு திணைக்களம் சார்பாக ஆஜராகிய அரச பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப் பெரேரா விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளித்தார். எதிர்வரும் 31 ம் திகதியும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மெஜிஸ்ரேட் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டார்.