ஜோர்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து இன்று அதிகாலை 305 பேர் நாடு திரும்பியுள்ளனர். டோஹாவில் இருந்து 20 இலங்கையர்களை ஏற்றி வந்த விமானம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் தரையிறங்கியது. ஜோர்தானின் அம்மான் நகரில் இருந்து 225 இலங்கையர்களோடு வருகைதந்த விமானம் இன்று அதிகாலை 4.35 மணியளவிற்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியது. வருகைதந்த அனைவரும் பிசிஅர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமனநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.