மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணான்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவெல் பெர்ணான்டோ ஆண்டகை காலி மறை மாவட்ட ஆயர் ரேமன் விக்கிரமசிங்க அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவணி இடம்பெற்றதோடு, மடு அன்னையின் ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் அன்னையின் ஆசிர்வாதத்தை வேண்டி பெருந்திரளான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.