வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலையில் 5 விமானங்களில் இலங்கையர்கள் வந்திறங்கியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். டுபாயிலிருந்து 40 பேரும், கட்டாரிலிருந்து 7 பேரும் வருகைதந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 13 பேரும், தோஹா நகரிலிருந்து நால்வரும், லெபனானிலிருந்து 245 பேரும், இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.