பாரிய அளவிலான 3 கஞ்சா சேனைகள் சுற்றி வளைக்கப்பட்டு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த சுமார் 11 ஆயிரம் கஞ்சா செடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக கொழும்பு கலால் விசேட சுற்றி வளைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஹம்பேகமுவ, அரம்பேகெம , உனகந்த ஆகிய பகுதிகளில் நடாத்தப்பட்டு வந்த 3 கஞ்சா சேனைகளேஇவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டன. காட்டுப்பகுதிக்குள் பத்து கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது. இங்கு 5அடிஉயரம் வரை மிகவும் செழிப்பாக கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
அறுவடைக்கு தயாராகிய நிலையிலேயே இவை முற்றுகையிடப்பட்டன. இவ்விடத்தில் கஞ்சா செடிகள் வெட்டப்பட்டு அவை உலர்த்தி விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் வெள்ளவாய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்