வீட்டு பணியாளர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்புக்களை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பணியாளர்ளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
எனினும் தற்போதைய சூழலை கருத்தி கொண்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மலேசியா அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு தொழில் விசாவை வழங்க தீர்மானித்துள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.