மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 467 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோதமாக இயங்கிவந்த 5 மசாஜ் நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டன. அங்கிருந்து 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.