போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் போதைப்பொருளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனமொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த மோட்டார் வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர். குறித்த வாகனத்தை பயன்படுத்தியே போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 அதிகாரிகளும் எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த 13 அதிகாரிகள் உள்ளடங்கலாக இதுவரை 21 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.