இந்தியாவில் தங்கியிருந்த 125 பேர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகபட்டினம் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல். 1160 ரக விமானத்தின் ஊடாக குறித்த 125 பேரும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அதன்பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டு அவர்கள் கொக்கல தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.