கொடுப்பனவை செலுத்தி பதிவுசெய்துள்ள இலத்திரனியல் ஊடகங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொது தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி சேவை , லக்ஹன்ட வானொலி, வசந்தம் டிவி, வசந்தம் எப்.எம் மற்றும் எமது வலையமைப்பின் உத்தியோகபூர்வ இணைய பக்கம் ஊடாகவும் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.