கொவிட் 19 வைரஸின் தோற்றம் தொடர்பில் கண்டறிவதற்கென சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின.
எனினும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தது. இந்நிலையில் அது தொடர்பில் கண்டறிவதற்கென உலக சுகாதார அமைப்பு விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று சீனாவிற்கு பயனித்தது. குறித்த குழு மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
அடுத்தக்கட்ட ஆய்வு ரீதியிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ள தயாமாரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது குழந்தைக்கு தாய் பால் வழங்குமாறு உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் ஊடாக அதிகளவான அதன் பிரதி பலன் குழந்தைக்கு கிடைக்குமென உலக சுகாதார அமைப்ப குறிப்பிட்டுள்ளது.