கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மொஸ்கோ நகரில் உள்ள கமலியா ஆராய்ச்சி மையம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துள்ளது. தடுப்பூசியை பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் இடம்பெற்று வருவதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி முதல் 12ம் திகதிக்குள் தடுப்பூசிக்கான பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாக ரஷய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் உலகின் சகல நாடுகளும் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பதானது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.