அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது
Related Articles
அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது. அரசியலமைப்பு சபையின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் கூட்டம் நடைபெறும். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மாலை 4 மணிக்கு அரசியலமைப்பு சபை கூட்டம் ஆரம்பமாகுமென பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் சபையின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக அரசியலமைப்பு சபையின் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் இதன்போது கலந்துரையாடவுள்ளது. நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அரசியலமைப்பு சபையின் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.