நேற்றைய தினத்தில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆதரவாளர்கள் 18 பேரும், இதில் உள்ளடங்குகின்றனர். இதன்போது 4 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டத்தை மீறிய 157 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதோடு, மேலும் 440 பேர் சட்டமீறல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.