இந்தியாவிற்கு தப்பி சென்றதாக கூறப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்திய உயர்ஸ்தானிகரலாயத்துடன் ராஜதந்திர ரீதியில் அது தொடர்பான நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லசந்த ச்சந்தன பெரேரா எனப்படும் அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கோவையில் வைத்து அவர்கள் கைதானதாக த இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இரு பெண்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. குற்றவியல் சதி மற்றும் ஆவண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக த இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.