31வது பலேர்மோ மகளிருக்கான சர்வதேச ஒபன் டென்னிஸ் போட்டி இன்று இத்தாலியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 9ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும். கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி இடைநிறுத்தப்பட்டது. 5 மாதங்களின் பின்னர் இடம்பெறும் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டி இதுவாகும். போட்டியில் பங்கேற்கவிருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரா மார்டிச், மரியா சக்காரி, எலிஸ் மெர்டென்ஸ், கோன்டாவெய்ட், வோன்ட்ரோசோவா, மிலாடெனோவிச் உள்ளிட்ட வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.