இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 54 ஆயிரத்து 865 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 852 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, வைரஸ் தொற்றினால் இதுவரை 37 ஆயிரத்து 436 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமுலில் உள்ளது. தமிழகத்தில் 2 இலட்சத்திற்கு அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.