துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று பிற்பகல் ஒரு மணி முதல் கொழும்பு துறைமுக செயற்பாடுகளை வழமைப்போல் முன்னெடுக்க துறைமுக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.