நல்லாட்சி அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற வேலைத்திட்டம் காரணமாக கொழும்பு துறைமுக நகரத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டியிருந்த நிலப்பகுதியான 65 ஹெக்டயர்கள் இல்லாமல் போயுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மக்கள் சந்திப்பு ஹம்பாந்தேர்ட்டை கிரம சந்தியில் இடம்பெற்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
“கொழும்பு துறைமுக நகரம் பெரும் அளவிலான தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் இடம். அந்த துறைமுக நகரத்தில் எங்களுக்கு 65 ஹெக்டயர்கள் வரை காணப்பட்டது. அதனை மீள அந்த நிறுவனத்துக்கே வழங்கியுள்ளனர். இரண்டரை வருடங்கள் குறித்த வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தினர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைத்து அதனை தொழில்பேட்டையாக மாற்றுவதற்கே நாங்கள் திட்டமிட்டோம். அந்த தொழில்பேட்டைக்கு ஒரு தொழிற்சாலையையேனும் கொண்டவர இவர்களினால் முடியாது போனது. தெழில்பேட்டைக்கான காணியில் ஒரு பகுதியை தக்கவைக்க முடிந்தது. புதிய தொழிற்சாலைகளை கொண்டுவரும் திட்டத்தில் டயர் தொழிற்சாலையொன்றை உருவாக்கவுள்ளோம். அதேபோன்று மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்iறும் ஸ்தாபிக்கவுள்ளோம். “
இதேவேளை பெலியத்த பொலொன்மாருவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக படித்த புத்திகூர்மையுள்ள அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு திரண்டிருந்த மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மகாவெல பஹஜாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மக்கள் சந்திப்பிலும் பிரதமர் பங்கேற்றார். கொழும்பு நகரத்தை போன்று ஹம்பாந்தோட்டையை பொருளாதார நகராக மாற்றுவதே எமது நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.
திஸ்ஸமகாராம பிரதேசத்தில இடம்பெற்ற மற்றுமொரு மக்கள் சந்திப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார். தாய்நாட்டுக்காக முன்னோக்கிச் செல்லும் பயணத்தில் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் அதனை நிறுத்த போவதில்லையெனவும் பிரதமர் தெரிவித்தார்.