அமெரிக்காவில் டிக்டொக் செயலியை தடைசெய்வுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான நிறைவேற்று உத்தரவில் இன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகசந்திப்பொன்றில் அறிவித்துள்ளார். சீ’ன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டொக் செயலியின் ஊடாக அமெரிக்க பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
சுமார் 80 இலட்சம் அமெரிக்கர்கள் டிக்டொக் செயலியை பயன்படுத்தும் நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதன் ஊடாக சீன நிறுவனத்திற்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.